Tamilnadu
வன விலங்குகளை சமைத்து கறியாக விற்பனை.. நடுகாட்டில் வேட்டை கும்பலை சுற்றிவளைத்து பிடித்த வனத்துறை!
திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கவுத்திமலை காப்பு காட்டில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்வதாகவும், வேட்டையாடும் வனவிலங்குகளை இளைஞர்கள் சமைத்து சாப்பிடுவதாகவும் வனத்துறை அலுவலர் சீனிவாசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து,நேற்று இரவு வனத்துறையினர் கவுத்திமலை காப்பு காட்டில் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது காப்பு காட்டின் நடுவே வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு 9 பேர் கொண்ட கும்பல் தயாராக இருந்ததைப் பார்த்த வனத்துறையினர் உடனே அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, பச்சையப்பன், ரஞ்சித், மோகன்ராஜ், வெற்றி, அரிகிருஷ்ணன் மற்றும் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலை ஆகிய 9 பேர் என தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள்,நாட்டுத்துப்பாக்கி, நெற்றி பேட்டரி, டார்ச் லைட், வெடிமருந்து, வனவலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வலைகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், வனவிலங்குகளின் மாமிசத்தை வாங்கி சாப்பிட்டு வந்த பாலியபட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், மோகன்ராஜ், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு வனத்துறையினர் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!