Tamilnadu
சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்.. பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர்: நெகிழ்ச்சி சம்பவம்!
கோவை, உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில், இரயில்வே மேம்பாலத்தின் மீது, சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் முஜிப்பூர் ரகுமான் என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார்.
இதை அவ்வழியாக ஜீப்பில் வந்த சிங்காநல்லூர் காவல்துறை ஆய்வாளர் அருண் மற்றும் கோவை மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மரியமுத்து ஆகியோர் பார்த்துள்ளனர். உடனே ஜீப்பில் இருந்து இறங்கி வந்து, வாலிபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வழியாக சென்ற காவல்துறை அதிகாரிகள், விபத்திற்குள்ளான வாலிபரை மீட்டு சிகிச்சை அளிக்க உதவிய சம்பவத்தை அறிந்த காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் , கவால் ஆய்வார்கள் இருவரையும் பாராட்டியுள்ளார்.
காவல்துறை என்றால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்ற எண்ணை மாற்றி, "காவல்துறை உங்கள் நண்பன்" என்று செயலில் காட்டிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!