Tamilnadu
ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !
புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற சர்வதேச யோகா தின விழாவில், சமூக ஆர்வலர் ஒருவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீட்டர் தூரத்திற்கு யோகா தினம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே ஒன்றிய அரசின் தொடர் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்ன்ராஜ் ஏழுமலை என்பவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!