Tamilnadu
ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !
புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற சர்வதேச யோகா தின விழாவில், சமூக ஆர்வலர் ஒருவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீட்டர் தூரத்திற்கு யோகா தினம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே ஒன்றிய அரசின் தொடர் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்ன்ராஜ் ஏழுமலை என்பவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!