Tamilnadu
ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !
புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற சர்வதேச யோகா தின விழாவில், சமூக ஆர்வலர் ஒருவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீட்டர் தூரத்திற்கு யோகா தினம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே ஒன்றிய அரசின் தொடர் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்ன்ராஜ் ஏழுமலை என்பவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !