Tamilnadu
தன்னைத் தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. தாயை பயமுறுத்தும் போது நடந்த விபரீதம்!
மதுரை மாவட்டம், பரவை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சரவண விஷால். இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாம் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று, தாயை பயமுறுத்துவதாக நினைத்து விஷால் தன்னைத் தானே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்துப் அவரது தாய் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் பார்த்தபோது சரவண விஷால் உயிரிழந்தது தெரியவந்தது.
பிறகு போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், சரவண விஷால் ஒரு வருடமாக மன நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவர் தாயைப் பயமுறுத்துவதாக நினைத்து தன்னைத் தானே பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. தாயைப் பயமுறுத்துவதாக நினைத்து தன்னைத்தானே கழுத்தை பிளேடால் இளைஞர் அறுத்துக் கொண்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!