Tamilnadu
கார் மீது மோதிய லாரி.. உடல் நசுங்கி தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலி: குடும்பத்தினர் அதிர்ச்சி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த அஞ்சப்பா, அவரது மகன் கார்த்தி, புனித், ராமசந்திரா உட்பட 10 பேர் இரண்டு கார்களில் கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து காரில் தமிழ்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று இவர்கள் கார் மீது மோதியுள்ளது.
இதில், காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி அஞ்சப்பா, அவரது மகன் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!