Tamilnadu
“அவருக்கு காமாலை உள்ளதால் கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை”: அண்ணாமலையை கடுமையாக சாடிய முத்தரசன்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்ட 13 வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முத்தரசன் திருப்பூரில் ஆகஸ்ட் 9 தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான அன்று ஒன்றிய அரசை கண்டித்து "மோடியே வெளியேறு" என்ற மாபெரும் மாநில மாநாடு நடத்த போவதாகவும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசனிடம், கச்சத்தீவு பிரச்சினையில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக அண்ணாமலை கூறுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, கச்சத்தீவை தி.மு.க தாரவாக்கவில்லை.
அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இலங்கையுடன் நட்புறவாக இருக்கவேண்டுமென கச்சத்தீவை கொடுத்ததாகவும், தமிழர்கள் சென்று மீன் பிடிக்கலாம் வலைகளை உலர்த்தலாம், என விதிகள் இருந்தும், இலங்கை அரசு விதிகளை மதிக்காமல் நடந்து கொள்ளுவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், “அண்ணாமாலைக்கு காமாலை நோய் உள்ளதால் கண்ணும் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை. எனவே, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நல்ல மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாது, அண்ணாமலை சமீபத்தில் தனது பெயர் தினமும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வரவேண்டும் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசி வருகிறார்.
ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறும் அண்ணாமலைக்கு பிரதமர் நிதியில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி மக்களுக்கு வேலை தருவதாக கூறியதை ஏன் இன்னும் செய்யவில்லை? வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதாகக் கூறியது ஏன் இன்னும் செய்யவில்லை?
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுவடே இல்லாமல் இருப்பதாக கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்கும் கழக அரசு - சுற்றுச்சூழலில் அக்கறை செலுத்தும் முதலமைச்சர்: முரசொலி !
-
டி20 உலகக்கோப்பை தேர்வு செய்யப்படாவிட்டால் நான் இதைதான் செய்வேன் - இளம்வீரர் கில் கருத்து !
-
உத்தரபிரதேசத்தில் பாஜக 50 இடங்களை தாண்டாது - கள ஆய்வு மேற்கொண்ட செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உறுதி !
-
மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச்சு : பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு!
-
மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் : பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு!