Tamilnadu
கொடியை காட்டியபடி ரயில் முன்பு ஓடி பெரும் விபத்தை தடுத்த ‘கீமேன்’.. குவியும் பாராட்டு!
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே இருக்கும் ரயில்பாதையை இன்று காலை எட்டாவது கேங் கீமேன் வீரபெருமாள் என்பவர் வழக்கம் போல ஆய்வு செய்து வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் தண்டவாளம் துண்டாக உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நேரத்தில் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அந்த பகுதியை கடக்கவிருந்தது.
இந்த ரயிலை தூரத்திலிருந்து பார்த்த வீரபெருமாள் துரிதமாக செயல்பட்டு சிவப்பு கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் சுமார் 200 மீ ஓடியுள்ளார். சிவப்பு கொடியை பார்த்ததும் ரயிலின் ஓட்டுனரும் ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனாலும் ரயிலின் இன்ஜின் பகுதி மட்டும் உடைந்த தண்டவாள பகுதியை கடந்து நின்றுள்ளது.
இதைத் தொடர்ந்து உடைந்த பகுதியில் புஷ் பிளேட் பொருத்தி இணைக்கப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது.
ஒருவேளை ரயில் வேகமாக இந்த உடைந்த தண்டவாளத்தை கடந்து சென்றிருந்தால் ரயில்தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் அபாயமும் இருந்த நிலையில், ரயில் விபத்தை தடுத்த கீமேன் வீரப்பெருமாளை ரயில்வே ஊழியர்களும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!