Tamilnadu
YouTube வீடியோ பார்த்து யோகா பயிற்சி.. சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கலம் வென்று அசத்திய சகோதரிகள்!
நேபாள நாட்டில் நடைபெற்ற இந்தோ நேபாள் சர்வதேச யோகா போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான சக்தி பிரியா, விஷாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தங்கை சக்தி பிரியா தங்கப் பதக்கத்தையும், அவரது மூத்த சகோதரி விஷாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதனை அடுத்து இன்று சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பிய சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். இதுகுறித்து சகோதரிகள் இருவரும் கூறும்போது, தாங்கள் இருவரும் பயிற்சியாளர்கள் இல்லாமல், யூடியூப் மூலமாகவே பயிற்சி செய்ததாகவும், ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என தெரிவித்தனர்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!