Tamilnadu
4 வயது குழந்தையை அடித்த தந்தை.. பயந்து ரம்பர் தோட்டத்திற்குள் ஓடியபோது பாம்பு கடித்து பரிதாப பலி!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ, சுஜிலின் ஜோ என்ற இரண்டு சிறுமிகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேந்திரன், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்துள்ளார். இதில் பயந்த குழந்தைகள் அருகே இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விஷா மோளை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது. இது குறித்து குழந்தைகள் அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!