Tamilnadu
ரூ.27 லட்சம் மோசடி புகார்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விரைவில் கைது?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ. 27 லட்சம் பணத்தைப் பெற்று நத்தம் விஸ்வநாதனிடம் கந்தசாமி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இது குறித்து கந்தசாமி அ.தி.மு.க தலைமைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ. 27 லட்சம் மோசடி புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!