Tamilnadu
ரூ.27 லட்சம் மோசடி புகார்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விரைவில் கைது?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ. 27 லட்சம் பணத்தைப் பெற்று நத்தம் விஸ்வநாதனிடம் கந்தசாமி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இது குறித்து கந்தசாமி அ.தி.மு.க தலைமைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ. 27 லட்சம் மோசடி புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!