Tamilnadu
ரூ.27 லட்சம் மோசடி புகார்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விரைவில் கைது?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ. 27 லட்சம் பணத்தைப் பெற்று நத்தம் விஸ்வநாதனிடம் கந்தசாமி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இது குறித்து கந்தசாமி அ.தி.மு.க தலைமைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ. 27 லட்சம் மோசடி புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!