Tamilnadu
Free Fire கேம் Password-ஐ நண்பர்கள் திருடியதால் விரக்தி : WhatsApp Status வைத்து இளைஞர் தற்கொலை!
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்.இளைஞரான இவர் கேட்டரிங் படிப்பை இடை நிறுத்தம் செய்து விட்டு அவ்வப்போது கிடைக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சய் Free fire ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.
மேலும் Free fire கேம் password-ஐ அவரது நண்பர்கள் திருடியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், தற்கொலைக்கு முன்பு சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்.ஒரு லட்சம் ரூபாய் தான் இழந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் சஞ்சய் தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!