Tamilnadu
”கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”.. இளையராஜா புகழாரம்!
கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா கச்சேரி நடந்தது. இதில் கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை வழிநடத்திச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இளையராஜா பாராட்டி பேசியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய இளையராஜா,"எனது அப்பா எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பின்னர் பள்ளியில் என்பெயரை ராஜய்யானு மாத்திட்டாங்க. பிறகு மியூசிக் மாஸ்டர் ராஜய்யா என்ற பெயர் நல்லா இல்லை ராஜானு வச்சிக்க சொல்லி மாத்திட்டாரு. பிறகு ராஜா என்ற பெயர்தான் நீண்ட நாள் இருந்தது.
அப்புறம் பட வாய்ப்பு வந்தபோது பஞ்சு அருணாசலம் இளையராஜானு என் பெயரை மாத்திட்டாரு. அதிலிருந்து நான் இப்போது வரை இளையராஜாதான். ஆனா கலைஞர் ஐயாதான் அப்பா வெச்ச ஞானதேசிகன்னு பேர்ல இருந்து ஞானத்தை எடுத்து 'இசைஞானி' என்ற பட்டத்தை அறிவித்தார்.
என் தந்தை வைத்த பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என்று நான் விழந்தேன். அதுதான் தலைவருடைய சிறப்பு. என் தந்தைக்குச் சமமானவர் கலைஞர். கலைஞர் வழியில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!