Tamilnadu
”கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”.. இளையராஜா புகழாரம்!
கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா கச்சேரி நடந்தது. இதில் கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை வழிநடத்திச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இளையராஜா பாராட்டி பேசியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய இளையராஜா,"எனது அப்பா எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பின்னர் பள்ளியில் என்பெயரை ராஜய்யானு மாத்திட்டாங்க. பிறகு மியூசிக் மாஸ்டர் ராஜய்யா என்ற பெயர் நல்லா இல்லை ராஜானு வச்சிக்க சொல்லி மாத்திட்டாரு. பிறகு ராஜா என்ற பெயர்தான் நீண்ட நாள் இருந்தது.
அப்புறம் பட வாய்ப்பு வந்தபோது பஞ்சு அருணாசலம் இளையராஜானு என் பெயரை மாத்திட்டாரு. அதிலிருந்து நான் இப்போது வரை இளையராஜாதான். ஆனா கலைஞர் ஐயாதான் அப்பா வெச்ச ஞானதேசிகன்னு பேர்ல இருந்து ஞானத்தை எடுத்து 'இசைஞானி' என்ற பட்டத்தை அறிவித்தார்.
என் தந்தை வைத்த பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என்று நான் விழந்தேன். அதுதான் தலைவருடைய சிறப்பு. என் தந்தைக்குச் சமமானவர் கலைஞர். கலைஞர் வழியில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!