Tamilnadu
கேரளாவை தாக்கிய West Nile வைரஸ்.. தமிழ்நாட்டிற்கு ஆபத்தா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?
கேரளாவில் 'ஜிகா' வைரசைப் போன்று புதிது புதிதாக உயிரைக் கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெஸ்ட் நைல் தொற்றால் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். எந்த புதிய வகை வைரசாக இருந்தாலும் கேரளாவை பாதிக்கும் வகையில் உள்ளது.
இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!