Tamilnadu
மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. தட்டி தூக்கிய போலிஸ் !
திருச்சி பொன்னமலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அந்த நபரின் அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு ஓடிச்சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர் அந்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த நபர் ராஜ்குமார் என்றும், இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!