Tamilnadu
மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. தட்டி தூக்கிய போலிஸ் !
திருச்சி பொன்னமலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அந்த நபரின் அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு ஓடிச்சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர் அந்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த நபர் ராஜ்குமார் என்றும், இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!