Tamilnadu
மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. தட்டி தூக்கிய போலிஸ் !
திருச்சி பொன்னமலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அந்த நபரின் அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு ஓடிச்சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர் அந்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த நபர் ராஜ்குமார் என்றும், இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!