Tamilnadu
மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. தட்டி தூக்கிய போலிஸ் !
திருச்சி பொன்னமலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அந்த நபரின் அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு ஓடிச்சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர் அந்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த நபர் ராஜ்குமார் என்றும், இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!