Tamilnadu
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அகமது மீரான் (21). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 4 வயது சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞர் அகமது மீரானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5,000 அபராதமும், அதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1வருட மெய்க்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக மாநில அரசு ரூபாய் 3லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Also Read
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!
-
சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!