Tamilnadu
வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலன்.. 3 மாதம் கழித்து அதே வீட்டில் காதலி எடுத்த விபரீத முடிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சுதா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் கடும் மனை உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர், மகளின் நிலையைப்பார்த்த அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த சுதா, தான் காதலன் வீட்டிற்கே சென்று தங்குவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு அங்குச் சென்று தங்கி வந்தார்.
இந்நிலையில் சுதாவும் காதலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்குச் சுதா சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!