Tamilnadu
சட்டவிரோதமாக மதுபான பார்.. பாஜக நிர்வாகி மீது புகார் அளித்த ஊர்மக்கள் : ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்டது பூதிப்புரம் பேரூராட்சி. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அங்கு உரிமம் இல்லாமல் மதுபானம் பார் நடத்துவதாக பா.ஜ.க நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பா.ஜ.க போடி கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவர், வாழையாத்துப்பட்டி விலக்கு அருகே உள்ள பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்களுடன், சிசிடிவு காட்சிகளும் உள்ளதாக பொதுமக்கள் கூறினார்கள்.
மேலும் இப்பகுதியில் மருத்துவமனை, கோயில்கள், பேருந்து நிறுத்தம் என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அப்பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை மற்றும் மதுபான பாராக செயல்படுவதால் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட பா.ஜ.க நிர்வாகி மீது ஏற்கனவே பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 10 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே உரிமம் இல்லாமல் செயல்படும் மதுபான பாரை தடை செய்தும், சட்டவிரோத செயலில் ஈடுபடும் பா.ஜ.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூதிப்புரம் ஊர் மக்களுடன் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த குமாரலிங்கம் என்பவர் இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, உடனடியாக அப்பாரை அகற்றி அவர் மீது நடவடிக்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!