Tamilnadu
விபத்தில் உயிரிழந்த குழந்தை.. கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுக்கும் பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர்.
இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது வேன் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை தனுஜா உயிரிழந்தார். இதன் பின் தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே குழந்தைக்கு ஒரு அடி உயரச் சிலை எழுப்பி கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி தனுஜாவின் சிலை எடுத்து கோவில் ஒன்றைக் கட்டியுள்ளனர். இதையடுத்து ஆண்டு தோறும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகின்றனர்.
இதன்படி இந்த ஆண்டும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருவிழா எடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மகளுக்குப் பெற்றோர் கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுத்து வருவது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!