Tamilnadu
தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் வாழ்த்து பெற்ற மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம் மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மிகுந்த மனக்கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவிலில் மணிகண்டன் - சுஜாலினி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதனையடுத்து தாலி கட்டி முடித்ததும் உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணியிடம் வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்வு மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பெற்றோர்களை மதியாமல் திரியும் சில பிள்ளைகளுக்கு மத்தியில் மணிகண்டன் தேடி வந்து வாழ்த்து பெற்றதற்கும் அங்கிருந்த மக்கள் வரவேற்றும் பாராட்டியிருக்கிறார்கள். ,ஏலும்
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!