Tamilnadu
ஒரே இரவில் 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்: அதிரடியாக களமாடிய சென்னை போலிஸ்.. வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
சென்னை வேளச்சேரி நேரு நகர் மதியழகன் தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலிஸார், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாசுக்மியா (24), ஜாகிர் உசேன் (23), அனோவர் உசேன் (24), ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல ஓ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் சுங்கச்சாவடி அருகே இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிகாலை சுமார் 03.00 மணியளவில், துரைப்பாக்கம், 200 அடி சாலை சுங்கச்சாவடி அருகே கஞ்சா வைத்திருந்த சந்தன்தாஸ் (31), சுமன் தேப்நாத் (23), அபுல்காசிம் (46), சுதீப் தேப்நாத் (30), ரபீந்திரா தேப்நாத் (34), ஆகிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 14.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இவர்கள் அனைவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கம் சுற்றி விற்பணையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
பின்னர் பிடிபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!