Tamilnadu
“குளத்தில் தள்ளி கொன்றுவிடுவேன்” : 7 வயது சிறுமிக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை - போலிஸார் அதிரடி !
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன் (58) பள்ளி தலைமையாசிரியராகவும் ஆசிரியராக தேவகி (47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மது போதையில் பள்ளி வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இது குறித்து தனது மகளிடம் தாயார் நடந்தவற்றை கேட்டறிந்ததில், பள்ளித் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து புகார் அளிக்க சென்ற பெற்றோரிடம் அந்த ஆசிரியர்க்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு மிரட்டியும், பணம் தருவதாக சொல்லியம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை உறுதி படுத்தினர். அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலிஸார் தலைமையாசிரியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் தமிழ்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் தேவகியை வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான தலைமையாசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 வயது பள்ளி மாணவிக்கு மது போதையில் பள்ளி தலைமை ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !