Tamilnadu
“திருட்டு பிரியாணி வேணாம்னா” - ரம்ஜான் நாளில் பல்பு வாங்கிய பா.ஜ.க பிரமுகர்!
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை இன்று இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே புது உடைகளை அணிந்து மசூதிக்குச் சென்று சிறப்புத் தொழுகையை முடித்து, அங்கிருந்தவர்களிடம் கட்டிப்பிடித்து தங்களின் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து ரமலான் பண்டிகையில் மிகவும் முக்கியமான பிரியாணியை தங்கள் வீட்டில் சமைத்து, அதை வேறு மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியில் ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நமக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்களிடமும் நாமும் ராமலான் பண்டிகை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே உரிமையுடன் பிரியாணி கேட்டு இன்று ரமலான் பிரியாணியை சுவைத்து நமக்கான சகோதர பாசத்தை வெளிப்படுத்தியிருப்போம்.
அந்த வகையில், ஜேம்ஸ் ஸ்டான்லி என்ற இளைஞர் ஒருவர் தனது ட்விட்டரில், "பாய் கடைசியாக கேக்குறேன். பிரியாணி கிடைக்குமா? இல்ல மிஸ்டுகால் குடுத்து ஜீ கட்சியில சேரவா" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பா.ஜ.கவை சேர்ந்தவர், "தம்பி நீ சேர வேண்டாம். நானே உனக்கு பிரியாணி வாங்கி தறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த இளைஞர், "கடையில அண்டாவை தூக்கிட்டு வந்து தர பிரியாணி வேண்டாம்னா. காசு கொடுத்து வாங்கிக்கிறேன்" என கிண்டலடித்துள்ளார்.
தற்போது இவரின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. "சேத்துலயும் அடி வாங்கியாச்சு...சோத்துலயும் அடி வாங்கியாச்சு" என நெட்டிசன்கள் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். வடிவேல் பாணியில் நானும் ஜெயிலுக்கு போரன் என்ற கணக்கா வம்படியாக வந்து மாட்டிக் கொண்டு நெட்டிசன்ககளிடம் பல்பு வாங்கிய பா.ஜ.க பிரமுகர்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!