Tamilnadu
திடீரென குறுக்கே வந்த மாடு.. நிலைதடுமாறி விழுந்த வாகனம் : மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவரது மகன் பாலகுமார். இவர்கள் இருவரும் பர்கூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் வாகனம் செல்லப்பாளையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பாலகுமார் வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே தாய் தனபாக்கியம் உயிரிழந்துள்ளார். இவரது மகன் பாலகுமார் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பாலகுமாரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!