Tamilnadu
திடீரென குறுக்கே வந்த மாடு.. நிலைதடுமாறி விழுந்த வாகனம் : மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவரது மகன் பாலகுமார். இவர்கள் இருவரும் பர்கூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் வாகனம் செல்லப்பாளையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பாலகுமார் வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே தாய் தனபாக்கியம் உயிரிழந்துள்ளார். இவரது மகன் பாலகுமார் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பாலகுமாரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !