Tamilnadu
திடீரென குறுக்கே வந்த மாடு.. நிலைதடுமாறி விழுந்த வாகனம் : மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவரது மகன் பாலகுமார். இவர்கள் இருவரும் பர்கூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் வாகனம் செல்லப்பாளையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பாலகுமார் வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே தாய் தனபாக்கியம் உயிரிழந்துள்ளார். இவரது மகன் பாலகுமார் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பாலகுமாரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!