Tamilnadu
பாசமாக வளர்த்த ஆட்டுக்காக உயிரை விட்ட இளைஞர் : கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்கும்போது நடந்த துயரம்!
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வார விடுமுறை என்பதால் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பிறகு வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, ஆட்டுக்குட்டி ஒன்று வயல் பகுதியிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனால் பதட்டமடைந்த மகாராஜன் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றுள்ளார். அந்நேரம் கயிறு பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி மகாராஜனும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி நீரில் மூழ்கிய மகாராஜனைச் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கும்போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கொடும்பாளூர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!