Tamilnadu
சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்.. நுங்கு வியாபாரம் செய்த தந்தை, மகனுக்கு நேர்ந்த துயரம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வெங்கடேஷ். இவர்கள் இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நுங்குகளை ஏற்றிக் கொண்டு கீழப்பழுவூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு நுங்குகளை இறக்கிவைத்துவிட்டு வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காகத் தந்தையும், மகனும் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!