Tamilnadu
சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்.. நுங்கு வியாபாரம் செய்த தந்தை, மகனுக்கு நேர்ந்த துயரம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வெங்கடேஷ். இவர்கள் இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நுங்குகளை ஏற்றிக் கொண்டு கீழப்பழுவூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு நுங்குகளை இறக்கிவைத்துவிட்டு வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காகத் தந்தையும், மகனும் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!