Tamilnadu
சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்.. நுங்கு வியாபாரம் செய்த தந்தை, மகனுக்கு நேர்ந்த துயரம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வெங்கடேஷ். இவர்கள் இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நுங்குகளை ஏற்றிக் கொண்டு கீழப்பழுவூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு நுங்குகளை இறக்கிவைத்துவிட்டு வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காகத் தந்தையும், மகனும் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!