Tamilnadu
TV சத்தமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட் வீச்சு.. இளைஞரின் கொடூர செயல் - உறவினர்கள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். முதியவரான இவர் தனது வீட்டில் சத்தமாக வைத்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனால், இவரின் பக்கத்து வீட்டில் இருக்கும் வீரமணி என்ற இளைஞர் முதியவர் வீட்டிற்கு சென்று டி.வி சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வீரமணி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து முதியவர் சம்பத் மீது வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் சம்பத் அலறியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !