Tamilnadu
TV சத்தமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட் வீச்சு.. இளைஞரின் கொடூர செயல் - உறவினர்கள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். முதியவரான இவர் தனது வீட்டில் சத்தமாக வைத்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனால், இவரின் பக்கத்து வீட்டில் இருக்கும் வீரமணி என்ற இளைஞர் முதியவர் வீட்டிற்கு சென்று டி.வி சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வீரமணி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து முதியவர் சம்பத் மீது வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் சம்பத் அலறியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!