Tamilnadu
TV சத்தமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட் வீச்சு.. இளைஞரின் கொடூர செயல் - உறவினர்கள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். முதியவரான இவர் தனது வீட்டில் சத்தமாக வைத்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனால், இவரின் பக்கத்து வீட்டில் இருக்கும் வீரமணி என்ற இளைஞர் முதியவர் வீட்டிற்கு சென்று டி.வி சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வீரமணி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து முதியவர் சம்பத் மீது வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் சம்பத் அலறியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!