Tamilnadu
’இப்படியும் தொடரும் எதிர்ப்பு’ - பெட்ரோல் விலை உயர்வால் மணமுடித்த கையோடு சைக்கிளில் சென்ற புதுமண தம்பதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. பட்டதாரியான இவர் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்கின்ற பட்டதாரி பெண்ணுக்கும் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஜெகசக்தி தனியார் திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாததால் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் மண்டபத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
- 
	    
	      SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
- 
	    
	      பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- 
	    
	      ”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!