Tamilnadu
வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்: சோகத்தில் மூழ்கிய உரக்கடை வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமி அக்ரோ சர்வீஸ் கடை. நேற்று (ஏப்.,18) இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றிருக்கிறார்கள்.
இன்று (ஏப்.,19) வழக்கம்போல் கடையை திறந்த கடையின் உரிமையாளர் பாபு, கடையில் உள்ள கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நள்ளிரவில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்காக உர கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போனதையடுத்து அக்குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
செஞ்சியில் முக்கிய பகுதியான விழுப்புரம் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நள்ளிரவில் பணம் கொள்ளை போன நிகழ்வு வியாபாரிகளிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாபுவின் கடையில் இருந்து 5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செஞ்சி போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!