Tamilnadu
வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்: சோகத்தில் மூழ்கிய உரக்கடை வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமி அக்ரோ சர்வீஸ் கடை. நேற்று (ஏப்.,18) இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றிருக்கிறார்கள்.
இன்று (ஏப்.,19) வழக்கம்போல் கடையை திறந்த கடையின் உரிமையாளர் பாபு, கடையில் உள்ள கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நள்ளிரவில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்காக உர கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போனதையடுத்து அக்குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
செஞ்சியில் முக்கிய பகுதியான விழுப்புரம் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நள்ளிரவில் பணம் கொள்ளை போன நிகழ்வு வியாபாரிகளிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாபுவின் கடையில் இருந்து 5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செஞ்சி போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!