Tamilnadu
வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்: சோகத்தில் மூழ்கிய உரக்கடை வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமி அக்ரோ சர்வீஸ் கடை. நேற்று (ஏப்.,18) இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றிருக்கிறார்கள்.
இன்று (ஏப்.,19) வழக்கம்போல் கடையை திறந்த கடையின் உரிமையாளர் பாபு, கடையில் உள்ள கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நள்ளிரவில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்காக உர கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போனதையடுத்து அக்குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
செஞ்சியில் முக்கிய பகுதியான விழுப்புரம் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நள்ளிரவில் பணம் கொள்ளை போன நிகழ்வு வியாபாரிகளிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாபுவின் கடையில் இருந்து 5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செஞ்சி போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!