Tamilnadu
A,B,C,D படிக்காததால் UKG படிக்கும் மாணவன் மீது தாக்குதல்.. மூச்சுத்திணறி மயங்கிய சிறுவனுக்கு சிகிச்சை!
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி டெய்சி ராணி தம்பதியர். இவரது மகன் சச்சின் (6). பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.
சிறுவன் சச்சின் ஆங்கில எழுத்துகளான A,B,C,D சரியாக சொல்லவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் சிறுவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் பள்ளியில் இருந்த மாணவன் சச்சினை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் சென்னை திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த சென்னை திரு.வி.க.நகர் போலிஸார் 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு கைதும் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!