Tamilnadu
’நீ என்ன போலிஸா?’.. ரோந்து வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: 2 பேரை கம்பி எண்ண வைத்த போலிஸ்!
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சரண்ராஜ். இவர் நேற்று இரவு சித்ரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நித்யா என்ற பெண், ஆட்டோ ஓட்டி வந்த ஒரு நபர் தன் மீது வேண்டும் என்ற மோதுவதாக வந்ததாக அவரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சரண் ராஜ் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்துள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுர், நீ என்ன போலிஸா? என்ன பிடிக்க என ஆவேசமாக சரண்ராஜிடம் பேசியுள்ளார். மேலும், எங்க ஏரியாவிலேயே வந்து கெத்து காட்டுறீங்களா? என ஆபாசமாக பேசியபடி ஆட்டோ ஓட்டுநரும், உடன் இருந்த மற்றொருவரும் சரண்ராஜை தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சரண்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை செய்தபோது, ரோந்து வாகன ஓட்டுநராக தாக்கியது ஆட்டோ ஓட்டுர் ஜயப்பன், மற்றும் விஜி என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்தபோலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!