Tamilnadu
விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்த சிறுவன்.. மீன் பண்ணை குட்டையில் மூழ்கி பரிதாப பலி
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன் ஹரிஹரன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் தாத்தா ரத்தினம் என்பவரின் மீன் பண்ணை பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தவறுதலாக மீன் பண்ணை குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் அவரி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!