Tamilnadu
விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்த சிறுவன்.. மீன் பண்ணை குட்டையில் மூழ்கி பரிதாப பலி
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன் ஹரிஹரன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் தாத்தா ரத்தினம் என்பவரின் மீன் பண்ணை பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தவறுதலாக மீன் பண்ணை குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் அவரி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!