Tamilnadu
விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்த சிறுவன்.. மீன் பண்ணை குட்டையில் மூழ்கி பரிதாப பலி
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன் ஹரிஹரன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் தாத்தா ரத்தினம் என்பவரின் மீன் பண்ணை பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தவறுதலாக மீன் பண்ணை குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் அவரி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!