Tamilnadu
இந்தி திணிப்பு: தமிழன் தான் சொன்னான்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று - பேரறிஞர் அண்ணாவின் உரை!
இந்தி மொழியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கடந்த காலத்தில் அறிவுறுத்திய போது அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இணையதளங்களில் வலம் வருகிறது.
அவ்வுரை வருமாறு:-
இப்போது ஆங்கிலமும், தமிழும் நம்மிடத்தில் இருக்கின்ற நேரத்தில் இந்தியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். பெரியவர்கள் சொல்வதாலே, சொல்லுகிறார்கள் என்று மட்டும் சொல்லக்கூடாது; அறிவுறுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அது உண்மையிலே அறிவின்பாற் பட்டதானால், ஏற்றுக்கொள்வதில் தமிழன் எப்போதும் தயக்கம் காட்ட மாட்டான், ஏனென்றால் தமிழன் தான் சொன்னான்; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று. ஆக`எதுவாக இருந்தாலும் என்னுடைய நாடு தான்; எல்லோருமே என்னுடைய உறவினர்கள் தான்’ என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துச் சொன்னவன் தமிழ் மகன் ஒருவன்தான்.
ஆனால் இடம் உயர்ந்தது என்பதாலே, அது அறிவுடையது என்ற தத்துவத்தை தமிழன் ஒப்புக் கொள்ளமாட்டான். இவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுகிறார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!