Tamilnadu
”மாதாமாதம் இந்த தேதிக்கு 30,000 வரனும்” - ஹோட்டல் மேனேஜரை மிரட்டிய போலி SI-ஐ மடக்கி பிடித்த போலிஸ்!
சென்னை முகப்பேரி கிழக்கு ஜெ.ஜெ.நகரில் வசித்து வரும் அன்பு செல்வம் (29), விருகம்பாக்கம் சாலிகிராமம் பக்தியில் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அந்த விடுதியில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அன்பு செல்வத்திடம் தான் போலிஸில் எஸ்.ஐ எனக் கூறி அடையாள அட்டையை காட்டு விடுதி மீது வழக்கு பதியாமல் இருக்க மாதாமாதம் 30,000 ரூபாய் தர வேண்டும் எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.
அதே மீண்டும் நேற்று (ஏப்.,14) வந்து அன்பு செல்வத்தின் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாயை பறித்ததோடு, தான் கேட்ட பணத்தை அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு வந்து தருமாறு கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
இதனையடுத்து சந்தேகமடைந்த அன்புசெல்வம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்தவை பற்றி புகார் தெரிவித்திருக்கிறார். உடனடியாக விரைந்து சென்ற போலிஸார் சம்பவ இடத்தில் இருந்த போலி போலிஸை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், பிடிபட்ட நபர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாபன் (26) என்பதும் போலியான காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
பின்னர் விஜய பிரதாபனை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்த 400 ரூபாயையும், போலி அடையாள அட்டை, ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஏற்கெனவே கடலூரில் பணமோசடி செய்தது தொடர்பாக விஜய பிரதாபன் மீது வழக்கு இருப்பது தெரிய வந்தது.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவுப்படி விஜய பிரதாபனை நேற்றே சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!