Tamilnadu
பிரியாணியில் கறிக்கு பதில் கரப்பான் பூச்சி.. சென்னையில் பிரபல ஹோட்டலை பூட்டி சீல் வைத்த உணவுத் துறையினர்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள புகாரி உணவகத்திற்கு, சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த தம்பதிகள் சாப்பிட சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு சம்மந்தப்பட்ட தம்பதி புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரி சுகுமார், உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு ஹோட்டல் சமையலறை சுத்தமாக இல்லாததை பார்த்த அதிகாரி கரப்பான் பூச்சிகள் சுற்றித் திரிந்ததையும் பார்த்துள்ளார். மேலும் சுகாதார பராமரிப்பில்லாமல் உணவுத்துறையின் விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் சமையலறையில் குப்பைகளாக இருந்திருக்கிறது.
இதனையடுத்து பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது, சமையல் அறை முழுவதும் அசுத்தமாக இருந்தது ஆகியவற்றை கருத்தில்கொண்டு மூன்று நாட்கள் திறக்க அனுமதி மறுத்து உணவகத்தை மூடினார்.
மேலும் உணவகத்தில் இருந்த சுமார் 8 கிலோ பிரியாணியை கீழே கொட்டி அழித்ததோடு, உணவகத்தில் எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!