Tamilnadu
பிரியாணியில் கறிக்கு பதில் கரப்பான் பூச்சி.. சென்னையில் பிரபல ஹோட்டலை பூட்டி சீல் வைத்த உணவுத் துறையினர்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள புகாரி உணவகத்திற்கு, சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த தம்பதிகள் சாப்பிட சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு சம்மந்தப்பட்ட தம்பதி புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரி சுகுமார், உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு ஹோட்டல் சமையலறை சுத்தமாக இல்லாததை பார்த்த அதிகாரி கரப்பான் பூச்சிகள் சுற்றித் திரிந்ததையும் பார்த்துள்ளார். மேலும் சுகாதார பராமரிப்பில்லாமல் உணவுத்துறையின் விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் சமையலறையில் குப்பைகளாக இருந்திருக்கிறது.
இதனையடுத்து பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது, சமையல் அறை முழுவதும் அசுத்தமாக இருந்தது ஆகியவற்றை கருத்தில்கொண்டு மூன்று நாட்கள் திறக்க அனுமதி மறுத்து உணவகத்தை மூடினார்.
மேலும் உணவகத்தில் இருந்த சுமார் 8 கிலோ பிரியாணியை கீழே கொட்டி அழித்ததோடு, உணவகத்தில் எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
Also Read
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?