Tamilnadu
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தாததால் நடந்த விபரீதம்.. உடல் செயலிழந்து பெண் பரிதாப பலி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து மாரியம்மாள் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி கூட அவர் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!