Tamilnadu
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தாததால் நடந்த விபரீதம்.. உடல் செயலிழந்து பெண் பரிதாப பலி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து மாரியம்மாள் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி கூட அவர் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!