Tamilnadu
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தாததால் நடந்த விபரீதம்.. உடல் செயலிழந்து பெண் பரிதாப பலி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து மாரியம்மாள் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி கூட அவர் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!