Tamilnadu
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தாததால் நடந்த விபரீதம்.. உடல் செயலிழந்து பெண் பரிதாப பலி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து மாரியம்மாள் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி கூட அவர் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!