Tamilnadu
வளையல் கடை பெண்ணிடம் மாமுல் கேட்டு அடிதடி.. அதிமுக பெண் நிர்வாகிக்கு சிறை; காஞ்சி போலிஸ் அதிரடி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவர் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சித்ராவின் வளையல் கடையில் வந்து 50 ஆயிரம் ரூபாய் மாமுல் கேட்டுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி திலகவதி. மாமுல் கொடுக்காவிட்டால் கடையை அகற்றச் சொல்லி விடுவேன் என்றும் திலகவதி சித்ராவிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும் பணம் கொடுக்காததால் அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலாளரான திலகவதி வளையல் கடையை நடத்தி வந்த சித்ராவை தாக்கியிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலிஸார் அதிமுக பெண் நிர்வாகியான திலகவதியை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!