Tamilnadu
பள்ளி மாணவியை கடத்த திட்டம்.. வீதியில் உலா வந்த 4 பேரை மடக்கிப் பிடித்த போலிஸ் - பின்னணி என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கு சதீஷ் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் தொலைபேசியில் பேசி பழகிவந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் மாணவியை கடத்திச் செல்ல சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றியிருந்த சதீஷ், மணிபாரதி, அஜித்குமார், பிரபு ஆகிய 4 பேரை போலிஸார் பிடித்து விசாரணை செய்தனர். இதில், மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடத்த முயன்றது உறுதியானதை அடுத்து நான்குபேர் மீது போலிஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!