Tamilnadu
பள்ளி மாணவியை கடத்த திட்டம்.. வீதியில் உலா வந்த 4 பேரை மடக்கிப் பிடித்த போலிஸ் - பின்னணி என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கு சதீஷ் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் தொலைபேசியில் பேசி பழகிவந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் மாணவியை கடத்திச் செல்ல சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றியிருந்த சதீஷ், மணிபாரதி, அஜித்குமார், பிரபு ஆகிய 4 பேரை போலிஸார் பிடித்து விசாரணை செய்தனர். இதில், மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடத்த முயன்றது உறுதியானதை அடுத்து நான்குபேர் மீது போலிஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !