Tamilnadu
சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!
ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150%வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொருளாதார அடிப்படையில் 81.8% மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை.1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது 300% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!