Tamilnadu
சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!
ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150%வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொருளாதார அடிப்படையில் 81.8% மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை.1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது 300% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!