Tamilnadu
சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!
ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150%வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொருளாதார அடிப்படையில் 81.8% மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை.1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது 300% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!