Tamilnadu
சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!
ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150%வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொருளாதார அடிப்படையில் 81.8% மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை.1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது 300% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!