Tamilnadu
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 67 ஆண்டு சிறை.. மகிளா நீதிமன்றம் அதிரடி!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பேபிஷாலினி. இந்த தம்பதிக்கு இரட்டையர் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு பிகராஷ் என்ற வாலிபர் கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இது குறித்து குழந்தைகள் இருவரும் தாயிடம் கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், பிரகாஷ் குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், மூன்று பிரிவுகளின் கீழ் தலா 20 வருடங்கள், ஒரு பிரிவின் கீழ் 7 வருடங்கள் என மொத்தம் 67 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!