Tamilnadu
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 67 ஆண்டு சிறை.. மகிளா நீதிமன்றம் அதிரடி!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பேபிஷாலினி. இந்த தம்பதிக்கு இரட்டையர் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு பிகராஷ் என்ற வாலிபர் கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இது குறித்து குழந்தைகள் இருவரும் தாயிடம் கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், பிரகாஷ் குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், மூன்று பிரிவுகளின் கீழ் தலா 20 வருடங்கள், ஒரு பிரிவின் கீழ் 7 வருடங்கள் என மொத்தம் 67 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!