Tamilnadu
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 67 ஆண்டு சிறை.. மகிளா நீதிமன்றம் அதிரடி!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பேபிஷாலினி. இந்த தம்பதிக்கு இரட்டையர் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு பிகராஷ் என்ற வாலிபர் கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இது குறித்து குழந்தைகள் இருவரும் தாயிடம் கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், பிரகாஷ் குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், மூன்று பிரிவுகளின் கீழ் தலா 20 வருடங்கள், ஒரு பிரிவின் கீழ் 7 வருடங்கள் என மொத்தம் 67 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!