Tamilnadu
தனியாகச் செல்லும் பெண்களே குறி.. வழிப்பறி கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலிஸ் - விசாரணையில் பகீர் தகவல்!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு மார்தாண்டம்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். மீன்படி தொழிலாளியான இவரது மனைவி ஜெனட் (38). இவர்கள் பாலவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெனட் நேற்று காலை கடைக்கு பொருட்களுக்கு வாங்கச் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியாக வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கழற்ற சொல்லி மிரட்டியுள்ளார்.
மேலும் அப்போது பார்சலில் இருந்து, 500 ரூபாய் பறித்துள்ளனர். உடனே அவர் சத்தம்போடவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடைகாவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இருவரையும் போலிஸார் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
போலிஸார் நடத்திய விசாரணையில், காஞ்சாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அனிஷ் என்பது தெரியவந்தது. இவர்களை பல நாட்களாக போலிஸார் தேடி வந்தநிலையில், இவர்களை போலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரோட்டில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!