Tamilnadu
நள்ளிரவில் காய்கறி கடையைத் திறந்த விவசாயி.. அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன மக்கள்..!
சூரிய உதயத்தை வைத்தும், சேவல் கூவலை வைத்தும் நேரத்தைக் கணிப்பது இன்றும் கிராமங்களில் வாழும் பெரியவர்களின் வழக்கம். அந்தவகையில் சேவல் கூவியதால் விடியப்போகிறது என நினைத்து நள்ளிரவிலேயே காய்கறி விற்பனையை தொடங்கிய விவசாயியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கிராமத்து விவசாயி ஒருவர் சேவல் கூவியதால், பொழுது விடியப்போவதாக என நினைத்து எழுந்து நள்ளிரவு நேரத்தில் கீரை, காய்கறிகளை விற்பனை செய்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வைரவன் (75). இவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே தினமும் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலைநேரத்தில் தனது தோட்டத்தில் இருந்து கீரை, வாழைத்தண்டு, வாழைக்காய், பிரண்டை, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பறித்து வந்து அடுத்த நாள் வியாபாரத்திற்கு தயார் செய்துள்ளார்.
பின்னர் திருப்பத்தூருக்கு வந்து நள்ளிரவில் அண்ணா சிலை அருகில் ஒரு சாக்குப்பையை விரித்து அவர் விற்பனைக்காக காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு காய்கறி விற்க வந்திருக்கிறீர்களே என்று கேட்கவே, மணி பார்க்கத் தெரியாது என்றும் சேவல் கூவியதால், பொழுது விடியப்போவதாக நினைத்து எழுந்து வந்தேன் எனக் கூறியுள்ளார்.
விவசாயி சொன்ன பதிலைக் கேட்டுத் திகைத்த அவர்கள், நள்ளிரவிலேயே அவரிடம் கீரை உள்ளிட்ட காய்கறிகளை வாங்கிச் சென்றனர். பின்னர், மாடுகள் தொல்லை தரும் எனப் போலிஸாரின் அறிவுரையை அடுத்து, கடையை எடுத்து வைத்துவிட்டு அதிகாலையில் மீண்டும் விற்பனை செய்யத் தொடங்கினார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!