Tamilnadu
வனப்பகுதிக்குச் சென்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குடியிருப்பு பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி 8 வயது சிறுமி வெங்கடேஷ் என்பவனால் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இது சம்மந்தமாக கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 2/2018 ன் படி வழக்கு பதியப்பட்டு உதகை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி வெங்கடேசுக்கு பிரிவு 366 ன் படி 10 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு பிரிவு 6 ன் படி 20 ஆண்டு சிறை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா அதிரடி உத்தரவிட்டார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!