Tamilnadu
“பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு” : சென்னை ஐகோர்ட் பாராட்டு!
தர்மபுரி மாவட்டம் பி கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 2006 இல் தனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ல் கணவரை பிரிந்து விட்ட நிலையில் ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்..தொடரந்து பேறுகால விடுப்பு கேட்டு, தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தபோது ,
மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுதியின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மறுமணத்தின் காரணமாக மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என
மறுத்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார் .தான் 2017இல் தான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாகவும் எனவே தனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதனால் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!