Tamilnadu
மீண்டும் விறகு அடுப்பு.. மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல், டீசல் விலை: மோடி அரசை சாடும் பெண்கள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மறறும் சமையல் ஏரி வாயு விலையை குறைக்காமல் தினமும் விலையை அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி எரிபொருள்களின் விலை உயராமல் இருந்தது. தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை குறைத்தார்.
இதனால் ஏழை மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஒன்றிய அரசும் பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் ஏரி வாயுக்கான விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஒன்றிய அரசு இந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்த்தியுள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 102.39 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து 103.14 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போன்று நேற்று 92.44 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 93.20 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 984 ரூபாய்க்கு வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1034 ஆக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பாமர மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒன்றிய அரசின் இந்த விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியதால் நியாயவிலை கடைகளில் வழங்கிய மண்ணெண்ணெய் நிறுத்தி விட்டதாகவும் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!