Tamilnadu
“மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை உறுதி” : அதிரடியாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஊராட்சிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2011ல் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வகையில், அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் நல பணியாளர்களை நியமித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவர்களை வீட்டுக்கு அனுப்பியது.
வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியும், அதை எதிர்த்து அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என உறுதியளித்தார்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!