Representational image
Tamilnadu
குட்டிகளுடன் காட்டு யானை.. காவலாக நிற்கும் 9 யானைகள் - தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ள நிலையில் அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள், தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் வேலைக்கு செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தற்போது ரன்னிமேடு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குட்டிகளுடன் 9 யானைகள் இருப்பதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே நேற்று முதல் குட்டியுடன் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. பகல் முழுவதும் ரயில் தண்டவாளத்தில் உலா வருவதால், மலை ரயில் வேகத்தை குறைத்து இயக்குமாறு வனத்துறையினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!