Representational image
Tamilnadu
குட்டிகளுடன் காட்டு யானை.. காவலாக நிற்கும் 9 யானைகள் - தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ள நிலையில் அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள், தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் வேலைக்கு செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தற்போது ரன்னிமேடு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குட்டிகளுடன் 9 யானைகள் இருப்பதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே நேற்று முதல் குட்டியுடன் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. பகல் முழுவதும் ரயில் தண்டவாளத்தில் உலா வருவதால், மலை ரயில் வேகத்தை குறைத்து இயக்குமாறு வனத்துறையினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!