Tamilnadu
“5 வயது சிறுவன் மற்றும் 75 வயது மூதாட்டியை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது” : போலிஸ் விசாரணை !
திருப்பெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். (23). செய்யாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் சுகுணா மற்றும் சுகுணாவின் 75 வயது தாய் நாகம்மாள் இவர்களுடன் திருப்பெரும்புதூரில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
ரஞ்சித்குமார் சுகுணா இருவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில், இன்று யுவராஜ் வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி நாகம்மாள் மற்றும் 5 வயது சிறுவன் புவியரசு ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில், அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிய யுவராஜை போலிஸார் கைது செய்து, கொலை குறித்த காரணங்களை விசாரணை செய்து வருகிறார்கள்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!