Tamilnadu
“5 வயது சிறுவன் மற்றும் 75 வயது மூதாட்டியை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது” : போலிஸ் விசாரணை !
திருப்பெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். (23). செய்யாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் சுகுணா மற்றும் சுகுணாவின் 75 வயது தாய் நாகம்மாள் இவர்களுடன் திருப்பெரும்புதூரில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
ரஞ்சித்குமார் சுகுணா இருவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில், இன்று யுவராஜ் வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி நாகம்மாள் மற்றும் 5 வயது சிறுவன் புவியரசு ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில், அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிய யுவராஜை போலிஸார் கைது செய்து, கொலை குறித்த காரணங்களை விசாரணை செய்து வருகிறார்கள்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!