Tamilnadu
விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளி மீது பாய்ந்தது போக்சோ!
திருவண்ணாமலை மாவட்டம், பத்தியாவரம் கிராமத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் ஆண்கள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்தப் பள்ளியில் படிக்கும் 113 மாணவர்கள் அருகே இருக்கும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் சில மாணவர்கள், விடுதியின் துணை காப்பாளர் துரைப்பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் திருவண்ணாமலை சமூக நலத்துறை இணையதளத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களைக் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு காவல்நிலைத்தில சமூகநலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !