Tamilnadu
விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளி மீது பாய்ந்தது போக்சோ!
திருவண்ணாமலை மாவட்டம், பத்தியாவரம் கிராமத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் ஆண்கள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்தப் பள்ளியில் படிக்கும் 113 மாணவர்கள் அருகே இருக்கும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் சில மாணவர்கள், விடுதியின் துணை காப்பாளர் துரைப்பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் திருவண்ணாமலை சமூக நலத்துறை இணையதளத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களைக் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு காவல்நிலைத்தில சமூகநலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!