Tamilnadu
சாலையில் ரகளை செய்த போதை ஆசாமி.. போலிஸை பார்த்ததும் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு - என்ன நடந்தது?
திண்டிவனம் அருகே சாலையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர், போலிஸாரை கண்டதும் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே வடமாநில இளைஞர் ஒருவர் சாலையோரம் இருந்த கடைக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலிஸார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலிஸாருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அவனம்பட்டு எல்லையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்தார்.
பின்னர் கிணற்றில் இருந்து மேலே ஏறி வர மறுத்ததால், மயிலம் போலிஸார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிணற்றில் தத்தளித்த வடமாநில இளைஞரை கயிறு மூலம் மீட்டனர்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!