Tamilnadu
இல்லாத நிறுவனத்திற்கு வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கிய கும்பல்: விசாரணையில் வெளிவந்த உண்மை!
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். அதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்கள் இருவரும் தொழில் தொடங்கப் போவதாகக் கூறி பஞ்சாப் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்றுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டாமல் இருந்துவந்துள்ளனர். இது குறித்து வங்கி நிர்வாகம் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர்களின் ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் போலியாகக் கடன் வாங்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் இருவர் மீதும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது நண்பர்களான குபேந்திரன் மற்றும் சதாசிவம் இருவரும் விநாயக டிரேடர்ஸ் என்ற பெயரில் போலியாக ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்றது தெரியவந்தது.
மேலும் இந்த பெயரில் எந்த நிறுவனமும் இலை என்பதும் விசாரணையில் தெரிந்ததை அடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?