Tamilnadu
இல்லாத நிறுவனத்திற்கு வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கிய கும்பல்: விசாரணையில் வெளிவந்த உண்மை!
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். அதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்கள் இருவரும் தொழில் தொடங்கப் போவதாகக் கூறி பஞ்சாப் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்றுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டாமல் இருந்துவந்துள்ளனர். இது குறித்து வங்கி நிர்வாகம் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர்களின் ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் போலியாகக் கடன் வாங்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் இருவர் மீதும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது நண்பர்களான குபேந்திரன் மற்றும் சதாசிவம் இருவரும் விநாயக டிரேடர்ஸ் என்ற பெயரில் போலியாக ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்றது தெரியவந்தது.
மேலும் இந்த பெயரில் எந்த நிறுவனமும் இலை என்பதும் விசாரணையில் தெரிந்ததை அடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!